Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா, தெலங்கானாவில் இணையதளங்கள் முடக்கம் – மீண்டும் தொடங்கும் ரேன்சம்வேர் வைரஸ் !

Webdunia
சனி, 4 மே 2019 (11:22 IST)
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மின்வாரிய இணையதளங்கள் ரேன்சம்வேர் வைரஸால் முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளங்களை முடக்கி அதன் பின்னர் அதை சரிசெய்ய பணம்பிடுங்கும் ரேன்சம்வேர் எனும் வைரஸ் உலகமெங்கும் பல இடங்களில் அதிகமாகி வருகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் கடந்தகாலத்தில் முடக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து இப்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மின்வாரிய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய 6 பிட்காயின்கள் (சுமார் 23000) ரூபாய் கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சைபர் பிரிவின் ஆணையர் ‘ இந்த தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முடக்கப்பட்ட இணையதளங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்குவதாகவும் அதில் இருந்து தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என தெலங்கானா மின்வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments