Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு

கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு
, ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (17:35 IST)
தேர்தல் நடக்கும் நேரத்தில் திடீரென கூட்டணியில் பிளவு ஏற்படும் ஏற்படுவதும், கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகிச் செல்வதும், புதிதாக கட்சிகள் கூட்டணியில் இணைவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது 
 
அந்த வகையில் பீகார் மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் போட்டியிடவில்லை என ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் போட்டியிட போவதில்லை என ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு பீகார் மாநில தேர்தல் முடிவில் பெரும் திருப்பத்தை ஏற்படும் என்று கூறப்படுகிறது 
 
கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் போட்டியிடப் போவதில்லை என லோக் ஜனசக்தியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் காலிக் அவர்களும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவிலும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணியே தொடரும் என்று லோக் ஜனசக்தி குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி