தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!

Prasanth Karthick
திங்கள், 25 நவம்பர் 2024 (12:33 IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் எதிர்கட்சியினர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுமே தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கின. இதனால் மக்களவை மதியம் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

ALSO READ: நாம எந்த மண்ணுல இருக்குறோமோ அந்த மொழிதான் பேசணும்… புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கருத்து!
 

ஆனால் மாநிலங்களவை இன்று முழுவதுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் நாளை மாநிலங்களவை அமர்வு இல்லை. இதனால் மீண்டும் புதன்கிழமை காலையில்தான் மாநிலங்களவை அமர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments