Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு: ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (08:57 IST)
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, 'பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு' என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, 'பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரின் அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மற்ற 3 காவலர்களும் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும், பெரியபாண்டியனை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக முனிசேகர் சுட்டதாக பாலி மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments