Publish Date: Fri, 22 Sep 2017 (18:23 IST)
Updated Date: Fri, 22 Sep 2017 (18:25 IST)
ரயி டிக்கெட் முன்பதிவு சேவைகளில் இருந்து டெபிட் கார்ட் பேமெண்ட்டை ஐஆர்சிடிசி ரத்து செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் வசதியும் உள்ளது. டிக்கெட் கட்டணத்தை செலுத்த டெபிட், கிரெடிட், ஆன்லைன் பேமெண்ட், வாலட் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கான பேமெண்ட் கேட்வே சேவையை ஐஆர்சிடிசி நீக்கியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், கனரா பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்களின் டெபிட் கார்ட்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.