Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (07:34 IST)
தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்!
நேற்று முன்தினம் மும்பையில் உள்ள வாணங்கி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவருடன் சென்ற சிறுவன் எதிர்பாராத வகையில் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து அந்த சிறுவனை காப்பாற்றிய தன்னையும் கடைசி நொடிகள் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
உண்மையான ஹீரோவான இந்த ரயில்வே ஊழியருக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அந்த ரயில்வே ஊழியர் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தபோது அவருடைய சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்
 
மேலும் அவருக்கு விருது வழங்கவும் மத்திய மாநில அரசுகளிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதுகுறித்து அந்த ரயில்வே ஊழியர் கூறியபோதும் அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது என்னுடைய உயிரை கூட நான் கவலைப்படவில்லை என்னால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments