Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

ஆக்ஸிஜன் கொண்டு செல்ல “ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்” சிறப்பு ரயில்கள்! – ரயில்வே நடவடிக்கை!

Advertiesment
National
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:34 IST)
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல பசுமை வழிதடத்தில் “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜனை கால தாமதமின்றி கொண்டு சேர்க்க முடியும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட வேணாம்னு சொல்லலை! – முன்ஜாமீன் கேட்கும் மன்சூர் அலிகான்!