Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அசாம் முதல்வர்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:22 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் அசாம் மாநிலம் சென்றபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அசாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது குறித்து அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வ சர்மா கூறிய போது மக்களை வன்முறை செயலுக்கு ராகுல் காந்தி தூண்டுவதாக குற்றம் காட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
 
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்றும் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments