Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அசாம் முதல்வர்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:22 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் அசாம் மாநிலம் சென்றபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அசாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது குறித்து அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வ சர்மா கூறிய போது மக்களை வன்முறை செயலுக்கு ராகுல் காந்தி தூண்டுவதாக குற்றம் காட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
 
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்றும் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments