Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அசாம் முதல்வர்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:22 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் அசாம் மாநிலம் சென்றபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அசாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது குறித்து அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வ சர்மா கூறிய போது மக்களை வன்முறை செயலுக்கு ராகுல் காந்தி தூண்டுவதாக குற்றம் காட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
 
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்றும் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments