Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும்: பொதுமக்கள் வாக்குவாதம்!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:14 IST)
ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர் என ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து சிஎம்டிஏ விளக்கம் அளித்தனர். 
 
மேலும் பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர் என்று கூறிய அதிகாரிகளிடம் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும்: பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்
 
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்க வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 கோயம்பேட்டில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என டிக்கெட் அளித்திருந்த நிலையில் திடீரென கிளாம்பாக்கத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்று பயணிகளிடம் வலியுறுத்த முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
 
அதேபோல் பயணிகளும் கோயம்பேட்டிலிருந்து எங்களால் கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை என்றும் எனவே வசதிகள் செய்து தரும்பரை கோயம்பேட்டிலிருந்து தான் பேருந்துகள் கிளம்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments