Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோகோ கோலா சர்ச்சை: ராகுல் காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (19:53 IST)
பாஜக பிரமுகர்கள்தான் அவ்வப்போது நெட்டிசன்களின் கையில் சிக்குவார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சிக்கியுள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தி கோகோ கோலா குறித்து கூறிய ஒரு கருத்தை நெட்டிசன்கள் தனி ஹேஷ்டேக் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
 
இன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, 'கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியர் யார் என்பது யாருக்காவது தெரியுமா? அவர்தான் முதலில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பரிசோதித்தவர். அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அதில் கிடைத்த பணத்தில் தான் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
 
ஆனால் கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் தொடங்கினார். உண்மை இவ்வாறிருக்க ராகுல் காந்தியின் கோகோ கோலா பேச்சு நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு தற்போது #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments