Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது ரேப் இன் இந்தியா!? – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!

Advertiesment
இது ரேப் இன் இந்தியா!? – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!
, வெள்ளி, 13 டிசம்பர் 2019 (12:59 IST)
மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி ‘ரேப் இன் இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மக்களவை கூட்டத்தில் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி ”நரேந்திர மோடி மேக் இன் இந்தியாவை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இதுபற்றி நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று கூறினார்.

ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு எதிராக பாஜக பெண் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜில்லாக இருங்கள் கிரேட்டா!! அமெரிக்க அதிபர் டிவிட்