Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”5 நாட்களுக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க வேண்டும்”.. போலிஸாருக்கு உத்தரவு

Advertiesment
கர்நாடகா

Arun Prasath

, வெள்ளி, 13 டிசம்பர் 2019 (09:11 IST)
வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனிடையே அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன், நித்யானந்தாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் நித்யானந்தா ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றார்.

எனினும், நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியவில்லை என லெனின் கருப்பன் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடித்த அறிக்கை அளிக்க வேண்டும் என பெங்களூர் காவல் துறைக்கு உத்தரவிட்டது.

மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்தபோது, அறிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை என்பதால், வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கண்டுபிடிக்காத பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் காற்று மாசுபாடு – வந்துவிட்டது எலக்ட்ரிக் ஆட்டோ !