Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா இலங்கை போலவே உள்ளது..! – ராகுல்காந்தி பதிவிட்ட மேப்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:19 IST)
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இந்திய நிலவரமும் இலங்கை போலவே உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் குதித்த மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

மக்கள் போராட்டத்தால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி தலைமறைவான நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது இலங்கை – இந்தியாவை ஒப்பிட்டு ஒரு வரைபடத்தை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, வகுப்புவாத கலவரங்கள் ஆகியவை இந்தியாவிலும், இலங்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே மாதிரியாக உயர்ந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் “மக்களை திசைதிருப்புவதால் உண்மை மாறப்போவது இல்லை. இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments