Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:32 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான கொளகையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பல நாடுகள் அவற்றில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன. இந்நிலையில் இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் இந்த தடுப்பூசி இந்திய மக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும் என்று ராகுல்காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக ‘விரைவில் இந்தியா கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக மாறும். அதனால் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை முடிவை வடிவமைத்து அறிவிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments