Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி..!

ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி..!
, வெள்ளி, 24 மார்ச் 2023 (15:40 IST)
காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளதை அடுத்து அவர் எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
 
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் எம்பி ஆக இருந்தால் வயநாடு தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தகுதியிழப்பு ஜனநாயக படுகொலைக்கு சமமானது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டு உள்ளோம் என்றும் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறி உள்ளது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கறவை மாடுகளுடன் வரும் மார்ச் 28 முதல் போராட்டம்- உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்