Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு முக்கிய உத்தரவு..!

rahul gandhi
, வியாழன், 23 மார்ச் 2023 (13:00 IST)
பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மோடி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக உள்ளனர் என கடந்த 2019 ஆம் தேதி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
30 நாட்களுக்குள் ராகுல் காந்தி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய யூடியூப் இணையதளம்.. பயனர்கள் அதிர்ச்சி..!