Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையும் தடுக்காது ராகுல் காந்தியின் நடைபயணத்தை..!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:34 IST)
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம் கர்நாடகாவில் கொட்டும் மழையையும் தொடர்கிறது.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக இந்திய ஒற்றுமை என்ற நடைப்பயணத்தை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளாவில் முடித்துவிட்டு அதன் பின் தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது.

கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை வழியாக மைசூரு, மாண்டியாவில் பயணத்தை தொடர்ந்த ராகுல் இன்று காலை சித்திரதுர்கா மாவட்டம் ஹார்திகோட்டையில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

வழியில் போச்கட்டே பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் பயணத்தை தொடர்ந்தார். இந்த யாத்திரையில் சிறுவர்கள், பெண்கள், என பெரும்பான்மையானவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுலுடன் நனைந்தவாறு பங்கேற்றுள்ளனர்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை நடை பயணம் குறித்து கருத்து கேட்ட போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டாலும் வேறு யார் கலந்து கொண்டாலும் எந்தவித தாக்கத்தையும் கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் நடைபயணம் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments