Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி மாற்றப்படும்: ராகுல்காந்தி

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (07:25 IST)
வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல்  வரும் வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜிஎஸ்டி வரிவிகித முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேய்ந்தது போல் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முன் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காம்தா நாத், ராமர் கோவில்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments