Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி ஒரு புலம்பெயர்ந்த தலைவர்: மத்திய அமைச்சர் விமர்சனம்!

ராகுல் காந்தி ஒரு புலம்பெயர்ந்த தலைவர்: மத்திய அமைச்சர் விமர்சனம்!
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (19:44 IST)
அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்தி ஒரு புலம்பெயர்ந்த தலைவர் என பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமேதி தொகுதி என்பது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி உள்பட பலர் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி ஆகும். ஆனால் அந்தத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது ராகுல்காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 
 
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கூறியதாவது: அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அங்க எந்த முன்னேற்றமும் இல்லை. உண்மை என்னவெனில், அவருடைய தொகுதிக்கு உட்பட்ட சுகாதார மையத்தில் எக்ஸ்-ரே கருவி கூட கிடையாது. அமேதி தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரளாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அமேதி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி புலம்பெயர்ந்த தலைவர்’ என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ்கெட் பங்குகளை வாங்கும் டாடா நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?