புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (14:47 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய அவர், "வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திப்பது என்பது வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்தது. ஆனால், தற்போது நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது," என்று தெரிவித்தார்.
 
பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவே பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்படி செயல்படுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வேறு கண்ணோட்டத்தை அளிப்பதை அரசு விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
 
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் இன்று டெல்லி வந்தடைந்தார். நாளை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் அணு உலைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments