Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை திருவிழா! – ஒடிசாவில் குவிந்த மக்கள்!

Puri Jegannath Temple
, வெள்ளி, 1 ஜூலை 2022 (11:36 IST)
இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நடைபெறும் நிலையில் அதை காண பல மாநில மக்களும் ஒடிசாவில் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநில மக்களும் வருகை தருவது வாடிக்கை.

இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்கும் நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பியர்… எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு!