Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்” - பிரியங்கா காந்தி சாடல்

Priyanka Gandhi

Siva

, புதன், 1 மே 2024 (22:01 IST)
இந்தியாவில் 70 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அசாம் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி நாட்டில் வேலை இன்மை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் 70 கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக காலியிடங்களை நிரப்புவோம். பாஜக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும், ஆனால் நீங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடுகிறீர்கள், எனவே இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறினார்.
 
பிரதமர் மோடி சாதாரண மக்களின் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அதனால் மக்கள் படும் துயரம் அவருக்கு புரியவில்லை. நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! என்ன காரணம்?