Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி !

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (17:30 IST)
அண்ணல் அம்பேத்கருக்கு நிகர் என பிரதமர் மோடியை  இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்து ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதிய நிலையில், மோடி, இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.  இவர் 1500க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட  அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது.

குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுத்தியுள்ள இதனை அம்பேத்கர் பார்த்திருந்தால் அவர் பெருமப்படுவார்.

இருவரும் இந்தியா பற்றி பெரியதாக கனவு கண்டவர்கள், செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என தெரிவித்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து, இளையராஜா, தன் படத்திற்கு இசையமைத்த பாடல்களை எப்படி திரும்ப பெற முடியாதோ அதெபோல் தான் கூறிய கருத்தையும் திரும்ப பெற முடியாது என தெரிவித்து, தான் யாரையும் விமர்சிக்கவில்லை என்ற தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இசை ஞானி இளையராஜாவை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, தன்னைப் பற்றிய  நூலிற்கு அணிந்துரை எழுதியதற்கு நன்றி எனக் கூறியதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments