Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் ராணுவ உற்பத்தி ஆலை.. பிரதமர் திறந்த வைத்த ஆலையின் சிறப்புகள்..!

Siva
திங்கள், 28 அக்டோபர் 2024 (11:23 IST)
பிரதமர் மோடி இன்று குஜராத்தில் ராணுவத்திற்கான விமான உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவன வளாகத்தை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி இந்த ஆலையை திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் ராணுவத்திற்கு தேவையான சி 295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்திற்கு சி 295 ரகத்தை சேர்ந்த 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும், மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளன.

விமான தயாரிப்பில் டாடா மற்றும் பாரத் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்களிப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய தாழ்தள பேரூந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்....

'கிராம உதயம்' சார்பில், பெண்களுக்கு விருது வழங்கும் விழா-ஏ.பி.ஜே அப்துல்கலாமின்பேரன் பங்கேற்பு....

சீமான் ஒரு நல்ல என்டர்டைனர், அவர் பேசுவதை ரசித்து, சிரித்து விலகிக் கொள்ள வேண்டும் -பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேச்சு.

234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’: துணை முதல்வர் உதயநிதி தகவல்

2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்

அடுத்த கட்டுரையில்
Show comments