Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐப்பசி பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கொடுத்த வனத்துறை..! எத்தனை நாட்கள்?

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (11:14 IST)
ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகமாக சென்று சுவாமி வழிபாடு செய்வது தெரிந்தது.

இந்த நிலையில், கனமழை காரணமாக கடந்த மாதம் பௌர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நாளை முதல், அதாவது அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொடர் மழை பெய்ததன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள் கவனமாக மலையேற வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நாளில் மீண்டும் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் வழிபட வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments