Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா விமர்சனம்

jp nadda
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (10:47 IST)
பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது ’கேரள மக்கள் தங்கள் பாதுகாப்பை இன்னும் உணரவில்லை என்றும் கேரளா பயங்கரவாதத்தின் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் வன்முறை ஏற்படுத்துபவர்களுக்கு கேரள மாநில அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறது என்றும் முதலமைச்சர் பினாரயி விஜயனின் மகள் மற்றும் மருமகன் ஆட்சியில் தலையிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஜேபி நட்டாவின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருடைய இந்த கருத்துக்கு கேரள ஆளும் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உலக சுற்றுலா தினம்; சுற்றுலாவுக்கு ஒரு தினம் எதற்காக?