டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியா? சுனிதா கெஜ்ரிவால் தலைமையில் அவசர ஆலோசனை!

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:33 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய விட்டால் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கூறிவரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கெஜ்ரிவால் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கெஜ்ரிவால் இல்லத்தில் சுனிதா கெஜ்ரிவால் உடன் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய அவரது மனைவி சுனிதா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments