Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!
, சனி, 23 டிசம்பர் 2017 (15:28 IST)
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மறைந்த  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில்  பங்கேற்கிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2ஜி வழக்கின் தீர்ப்பு ; கனிமொழியை முத்தமிட்டு வாழ்த்திய கருணாநிதி