Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையிலும் குடையை மறுத்த குடியரசு தலைவர்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (07:03 IST)
இந்தியாவின் முதல் குடிமகன் என்ற வகையில் குடியரசு தலைவருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கொட்டும் மழையில் குடையை கூட ஏற்காமல் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஏற்றுக்கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.



 
 
கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானப்படையின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட போது திடீரென மழை பெய்தது.
 
அப்போது குடியரசு தலைவரின் உதவியாளர்கள் குடையை கொண்டு வந்தபோது, அவர் அதை மறுத்துவிட்டார். ராணுவ வீரர்கள் மழையில் நனைந்து அணிவகுப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தானும் மழையில் நனைந்தபடியே அதனை ஏற்பதுதான்முறை என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments