கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடலாம்- சுகாதாரத்துறை

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (20:11 IST)
கர்ப்பிணிப் பெண்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போடலாம் என மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதில். கோவின் செயலியில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசில் மையத்திற்கு நேரில் சென்றோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இத்தனை நாட்களாகப் கர்ப்பிணிப் பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments