Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் மோடி: பிரவீன் தொகாடியா

இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் மோடி: பிரவீன் தொகாடியா
, செவ்வாய், 26 ஜூன் 2018 (19:58 IST)
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இந்து மதத்திற்கான கட்சி என்ற முத்திரையில் இருந்து வரும் நிலையில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இன்று அயோத்தி வருகை தந்த முன்னாள் இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக பொறுமையாக உள்ளோம். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதை எப்படி சாதிப்பது என்பது எங்களுக்கு தெரியும். ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையெழுத்துகள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
webdunia
இந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருக்கும் மசூதிகளுக்கு செல்கிறார், ஆனால் அருகே உள்ள அயோத்திக்கு இதுவரை அவர் ஒருநாள் கூட வந்ததில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்' என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலில் இனி நடிகர்களுக்கு எதிர்காலம் இல்லை: நீதிபதி கிருபாகரன்