Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியுரிமை சீர்திருத்த சட்டம்: சோனியா காந்திக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி!

குடியுரிமை சீர்திருத்த சட்டம்: சோனியா காந்திக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி!
, செவ்வாய், 31 டிசம்பர் 2019 (06:57 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் வரும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணிபுரிந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
webdunia
இந்த நிலையில் குடிரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? என்றும் இது குறித்த போராட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் நடைபெற்று வரும் போது அதற்கு ஆதரவு தெரிவித்து அவர் ஒரு வார்த்தை கூட கூறாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் 
 
புதுவை உள்பட காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ள நிலையில் சோனியா காந்தி இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனமாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கேள்விக்கு சோனியா காந்தி என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா - இந்தியா: ஜியோமியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்ன?