Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நமக்கு தேவை சிலை அல்ல; வேலை தான்..” பாஜகவை வெளுத்து வாங்கும் பிரகாஷ் ராஜ்

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (13:50 IST)
தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதை விட்டுவிட்டு வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் பட்டியலை தயார் செய்யலாம் என பாஜகவை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ”இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி சிலை அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்” என பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் “போராட்டக்காரர்கள் மீது அரசு வன்முறையை ஏவினாலும், போராட்டக்காரர்கள் வன்முறையினை தவிர்த்து அறவழியில் போராட வேண்டும்” என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments