Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டில்களை ஜேசிபியால் அழிக்க முயன்ற போலீசார்: முந்தியடித்து தூக்கிச் சென்ற மதுபிரியர்கள்..!

Mahendran
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:48 IST)
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க முயற்சித்தபோது அங்கிருந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த மது பாட்டில்களை எடுக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் வாகன சோதனையின் போது உரிமையின்றி கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க போலீசார் திட்டமிட்டனர்.
 
இந்த நிலையில் மது பாட்டில்களை வரிசையாக அடுக்கி ஜேசிபி எந்திரத்தை அதன் மேல் ஏற்ற இருந்த நிலையில் திடீரென அங்கிருந்த பொதுமக்களில் சிலர் மது பாட்டில்களை தூக்கிச் சென்றதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனை அடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மது பாட்டில்களை எடுக்க முயன்ற மதுப்பிரியர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீது இருந்த மது பாட்டில்கள் மட்டும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments