Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 97 ஆண்டுகள் சிறைத் தண்டனை- நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:52 IST)
நமது அண்டை மாநிலம் கேரளம். அங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 

கேரளாவில்  தன் உறவுக்கார பள்ளி சிறுமி ஒருவரை 9 ஆண்டுகளாக( 6 வயது முதல் 13 வயது வரை) பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை( தாய்மாமன், 41 வயது)  போக்சோ வழக்கில் கைது செய்த  போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வழக்கு காசர்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த  வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபருக்கு 97 வருட சிறைத்தண்டனையுடன், ரூ.8 லட்சம் அபாரமும் விதித்து காசர்கோடு மாவட்ட நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும்,  இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்