Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - பிரதமர் மோடி

தண்ணீர் பிரச்சனையை  போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - பிரதமர் மோடி
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:37 IST)
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
நீர் மேலாண்மையில் தற்போதுள்ள முறைகளை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கவுள்ளோம். 
 
மேலும், அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது.  நம் நாட்டில் உள்ள தாய்மார்கள் சசோதர சகோதரிகள் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காத நிலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.
 
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ நஷ்டத்தில் ..? ஏர்டெல் , வோடபோன் மீது கடுப்பான அம்பானி !என்ன ஆச்சு ?