Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பில் குறைபாடு: வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (15:02 IST)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளார்.

 
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.  பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் விளக்கினார் பிரதமர் நரேந்திர மோதி.
 
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாடு குறித்து தமது கவலையை அப்போது குடியரசு தலைவர் தெரிவித்ததாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரை சந்தித்தது குறித்து நரேந்திர மோதியும் தமது பக்கத்தில் பகிர்ந்து, அவர் வெளிப்படுத்திய கவலையும் வாழ்த்தும் எப்போதும் தாம் வலிமையுடன் திகழ ஆதாரமாக இருந்துள்ளன என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
பஞ்சாப் மாநில பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறையால், பிரதமர் மோதி தனது பயணத்தை நேற்று ரத்து செய்தார். இந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
 
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால், பஞ்சாப் பயணத்தை பிரதமர் மோதி நேற்று ரத்து செய்தார். இது குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணக்குழுவை அமைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments