Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வால் போராட்டம்; ராஜினாமா செய்து கம்பி நீட்டிய பிரதமர்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (14:52 IST)
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததால் கஜகஸ்தான் அரசு ராஜினாமா செய்துள்ளது.

சமீபத்திய காலங்களில் பல நாடுகளில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கஜகஸ்தான் நாட்டிலும் எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் பல பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் கஜகஸ்தானின் அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் ஆகிய மாகாணங்களில் அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் அவசரநிலையை பிரகடனப்படுதினார். எரிபொருட்கள் விலையை குறைப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனாலும் மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் நிலைமை கைமீறியுள்ளது.

இதனால் கஜகஸ்தானில் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று மொத்தமாக ராஜினாமா செய்துள்ளது. இதனால் அதிபர் காசிம் இடைக்கால அரசை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments