Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் மிகப்பெரிய 2வது அணை:

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (05:02 IST)
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 2வது அணை என்ற பெருமையை பெற்றுள்ள  சர்தார் சரோவர் அணையை வரும் நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.



 
 
கடந்த 1961ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த அணை தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மக்களின் இழப்பீடுகள் வழங்கப்படாததால் இந்த அணையின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த அணை திறக்கப்படும் நாள் தான் பிரதமர் மோடியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments