Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பூமி.. ஒரே குடும்பம்.. ஒரே எதிர்காலம்.. பிரதமர் மோடி பேச்சு..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:23 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே மதம் என்று பாஜகவின் கொள்கையாக இருந்த நிலையில் தற்போது ஒரே பூமி ஒரே குடும்பம் என்று பிரதமர் மோடி பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர் உச்சி மாநாடு நடந்த நிலையில் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதில் அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவை ஒன்றாக இணைந்து அனைவரும் முன்னேற வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார்.
 
 அனைத்து நாடுகளும் மோதல் போக்கை விடுத்து ஒரே உலகம்  ஒரே பூமி ஒரே குடும்பம் என்ற கொள்கையுடன் வாழ வேண்டும் என்றும் மோதல்கள் நடந்தால் யாருக்கும் பயன் இருக்காது என்றும் தெரிவித்தார். 
 
பிளவு பட்ட உலகம் சவாலுக்கு தீர்வை கொடுக்காது என்றும் ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் நாம் அனைவரும் உலகை பார்க்க வேண்டும் என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments