Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து.. தேர்தலும் நடத்தப்படும்: பிரதமர் மோடி வாக்குறுதி..!

Mahendran
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:32 IST)
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்ரீ நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். 
 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து உள்ளார் 
 
இது தொடர்பாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது ’புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்க நான் மும்முரமாக இருக்க வேண்டும் என்றும் விரைவில் இங்கே சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என்றும் இதன் மூலம் காஷ்மீர் மக்களின் கனவுகள் நினைவாகும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
பல தலைமுறைகளாக பயங்கரவாதம், பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை காரணமாக காஷ்மீரில் மக்கள் அச்சமாக இருந்த நிலையில் தற்போது அச்சமின்றி மக்கள் நடமாடும் நிலை உள்ளதாகவும் அதனால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார் 
 
மேலும் இங்கு உள்ள வைஷ்ணவா தேவி, அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் இப்போது அச்சம் இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். பாஜக ஆட்சியில் தான் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments