Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை வெளிப்படுத்தியதால் இண்டியா கூட்டணியில் பீதி: பிரதமர் மோடி பேச்சு

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:17 IST)
இஸ்லாமியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நான் உண்மையை பேசியதால் இந்தியா கூட்டணியினர் பீதி அடைந்துள்ளனர் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மக்களின் சொத்துக்களை பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகம் செய்ய சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன், இதனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் மட்டும் இந்தியா கூட்டணி பீதி அடைந்துள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அரசியலை நான் அம்பலப்படுத்திய போது அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் ஏன் உண்மையை கண்டு பயப்படாதீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அதை உறுதி செய்வது போல் பிரதமர் மோடி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments