Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:12 IST)
தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்றும் நேற்று கூட 14 மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவானதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அச்சத்துடன் கோடையை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் உள்ள உள் மாவட்டங்கள், பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments