Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சிருக்கீங்க? – பிரதமர் மோடி வேதனை!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (10:53 IST)
இந்திய மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னோட்டமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த ஊரடங்கில் நாள் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

ஆனால் மாலை நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவ்வளவு நேரம் அமைதியாக வீட்டிற்குள் இருந்தவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் பேர்வழி என வெளியேறி கூடி கும்மாளம் போட்டனர். மக்கள் கூடுதலை தவிர்ப்பதற்காகதான் இந்த ஊரடங்கே பிறப்பிக்கப்பட்டது என்பதை பலர் சரியாக உள்வாங்கி கொள்ளவில்லை.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”நிறைய மக்களுக்கு ஊரடங்கு குறித்த சரியான புரிதல் இல்லை. தயவு செய்து அரசின் பரிந்துரைகளை பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தற்காத்து கொள்ளுங்கள். தயவுசெய்து மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments