Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் மிக நீளமான அடல் சேது பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

Siva
வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:18 IST)
நாட்டின் மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார. ரூ.17,840 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் மும்பையின்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடல் சேது பாலம், மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரத்தை 20  நிமிடமாக குறைக்கிறது என்பதும், 21.8 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் நாட்டின் மிக நீண்ட பாலமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக இந்த பாலத்திற்கு அடல் சேது  என பெயரிடப்பட்டிருக்கிறது. 
 
 மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான ​​கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மும்பை மற்றும் நவி மும்பை இடையே பயணிக்க இரண்டு மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை அடல் சேது பாலம் வெகுவாக குறைக்கிறது.
 
இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். இந்த பாலம் மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான பயணத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments