ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

Mahendran
புதன், 8 அக்டோபர் 2025 (16:58 IST)
டெல்லியில் இன்று  9ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பேசினார்.
 
"மொபைல் டேட்டா நுகர்வில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஜிபி டேட்டாவின் விலை, ஒரு கப் தேநீரின் விலையை விடவும் குறைவாக உள்ளது," என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 
2014ஆம் ஆண்டுக்குப் பின், இந்தியாவில் மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் தயாரிப்பு 28 மடங்கும், ஏற்றுமதி 127 மடங்கும் உயர்ந்துள்ளன. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக மாறியுள்ளது.
 
தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், "கடந்த 11 ஆண்டுகளில் மொபைல் டேட்டா விலை 98% குறைந்துள்ளது. 2014-ல் ரூ. 287-ஆக இருந்த ஒரு ஜிபி டேட்டாவின் விலை, இன்று ரூ. 9.11 ஆகக் குறைந்துள்ளது," என்றார். உலகளவில் மொத்த மொபைல் பயனர்களில் 20% பேர் இந்தியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments