Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன செயலிகளுக்கு தடை; உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தல்! – என்ன சொல்ல போகிறார் பிரதமர்?

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (08:41 IST)
இந்தியாவில் உள்ள சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மெல்ல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனா – இந்தியா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவின் மொபைல் அப்ளிகேசன்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சீன பொருட்களுக்கான தடையும் தொடர்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை மக்களுடன் உரையாடும் அவர் சீன பொருள் பயன்பாடுகளை கைவிடுதல், சீனாவுடனான உறவுநிலை மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments