Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!

modi rishi
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:40 IST)
ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!
சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்கள்லுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக ரிஷி சுனக் அவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது
 
இந்த மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து பல தலைவர்கள் வந்து இருந்தார்கள் என்பதும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்: பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை!