Publish Date: Wed, 30 Mar 2022 (20:07 IST)
Updated Date: Wed, 30 Mar 2022 (20:08 IST)
வினாத்தாள் கசிந்ததால் தேர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்ட மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் இதனை அடுத்து விசாரணை செய்ததில் பல மாவட்டங்களில் இந்த வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது
24 மாவட்டங்களில் வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது