Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

Advertiesment
Kerala
, திங்கள், 3 மே 2021 (13:45 IST)
கேரளத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள இடதுசாரி கூட்டணிக்கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி செய்யப்போகிறது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.

கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. அதை முறியடித்து இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார் பினராயி விஜயன். இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க இப்போது இருக்கும் அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்பதால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பினராயி விஜயன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற திமுக!